அகதிகளுக்கு அடைக்களம் கொடுக்க முடியாமல் எம்மை நோக்கி விரல் நீட்டுவது அவர்களின் இயலாமையை காட்டுகிறது



அமைச்சர் ராஜித சேனாரத்ன ரோகிங்ய அகதிகள் விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவைஇகழ்வதாக நினைத்து புகழ்ந்துள்ளார் என ஹம்பாந்தோட்டை பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸதெரிவித்தார்.

ஊடகங்களுக்கு அவரது ஊடகப்பிரிவு அனுப்பியுள்ள செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ..

மியன்மார் அகதிகள் இலங்கையில் அச்சுறுத்தப்பட்ட விடயமானது பலத்த பேசு பொருளாகவுள்ளது. இது தொடர்பில்கருத்து தெரிவித்த அமைச்சர் ராஜித சேனாரத்ன, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ காலத்தில் இலங்கைக்குஅதிகள் வந்த போது, இன்று தாக்க வரும் பிக்குகள் அன்று எங்கிருந்தார்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்.


இதனூடாக இவர், இதன் பின்னால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த உள்ளார் எனும் விடயத்தை கூற வருகிறார். நாம்இனவாதிகள் என்றால், ஏன் நாம் அன்று மியன்மார் அகதிகளை சிறு துரும்பும் அணுகாத வகையில் பாதுகாக்கவேண்டும்.நாம் மியன்மார் அகதிகள் பாதுகாத்தது கூட தவறானது, இவ்வாட்சியின் நடைபெற்றதை போன்றுஅவர்களை தாக்கி இருக்க வேண்டுமென கூற வருகிறார்களா? பல விடயங்களில் சர்வதேசங்களை நெஞ்சை நிமிர்த்திஎதிர்த்த எங்களுக்கு இவர்களை எதிர்க்க முடிவு செய்திருந்தால், அது ஒரு பெரிய விடயமுமல்ல. 

இவ்வாட்சியில் மியன்மார் அகதிகளை பாதுகாக்க முடியவில்லை என்றால் அது அவர்களது ஆட்சியின் குறைபாடு. அதற்கு எம்மை கூறி தப்பிக்க வர வேண்டாம். அன்று நாம் பாதுகாத்த ஒன்றுக்கு இன்று இவ்வரசுக்கு பாதுகாப்பு வழங்கமுடியாமல் திணறுவதானது இவ்வாட்சியில் இனவாதத்தின் வேரூண்றகை எந்தளது ஆழமானது என்பதைஅறிந்துகொள்ளலாம். அவர்கள் இந்த நாட்டில் பல வருடங்கள் இருந்துள்ளார்கள் என்ற செய்தி கூட பலருக்கு அமைச்சர்ராஜித சேனாரத்தன கூறியே தெரிந்திருக்கும்.

நிழலின் அருமை வெயிலில் தெரியும் என்பது போல முன்னாள் ஜனாதிபதியின் அருமையை இப்போது தான் மக்கள்உணர்வார்கள். அமைச்சர் ராஜித போன்றார்கள் முன்னாள் ஜனாதிபதியை இகழ்வதாக நினைத்து அவரது வாயாலேயேஅவரது பெருமைகளை கூறிக்கொண்டிருக்கின்றார். உண்மை ஒரு போது அழிந்துவிடாது. முதலில் இப்படி தன்னைஅறியாமல் முன்னாள் ஜனாதிபதியை புகழும் அமைச்சர் ராஜிதவுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன் எனகுறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.