சிங்கள, தமிழ் வாத பிரச்சினை என்பது உலகம் அழியும் வரையுள்ள பிரச்சினை என்றுதான் சொல்ல வேண்டும் முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாடம் இருக்கிறது



இந்த நாட்டில் சிங்கள, தமிழ் வாத பிரச்சினை என்பது உலகம் அழியும் வரையுள்ள பிரச்சினை என்றுதான் சொல்ல வேண்டும் வடகிழக்கை இணைத்து என்னதான் அதிகாரம் கொடுத்தாலும் அவர்களுக்கு போதாது.. காரணம் அவர்களுக்கு இந்த நாடுவேண்டும்.. தமிழர்த்தாயகமாக தனிநாடு வேண்டும் என்பதே தமிழர்களின் இறுதி இலக்காகும்.


மொழியாலும் மதத்தாலும் பலகோடி தமிழர்கள் உலக நாடுகளில் வாழும் எந்த நாடும் அவர்களுக்கு உரித்தானதல்ல...அவர்களும் அந்தநாட்டுகளில் வாழும் மக்களே தவிர அவர்களுக்கான சொந்த நாடுகள் அல்ல அதனால்தான் இலங்கைக்கு சுதந்திரம் கிடைக்கப்பெற்ற போதும் கூட அவர்கள் முழுமனதோடு ஏற்றுக்கொள்ளவில்லை..


தமிழர்களின் சாத்வீக போராட்டத்தில் தொடங்கி ஆயுதப்போராட்டம் வரை முஸ்லிம்களை மொழியால் தமிழர்கள் என்று ஏற்றவர்கள் பிற்பாடு இணத்தால் பிரித்து துப்பாக்கியை முஸ்லிம்கள் பக்கம் திருப்பினார்கள். வடக்கில் இருந்து அன்று பலவந்தமாக வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களை யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னரும் கூட வடமாகாணத்திற்கு திரும்புவதை தமிழர்கள் விரும்பவில்லை அவர்களுடைய நோக்கம் இலங்கையில் முஸ்லிம்களுடைய ஜனப்பரம்பலை குறைத்து அவர்களுக்கான தனியலகு வேலியிட்டுவிட்டு மீண்டும் சிங்களவர்களோடு தமிழர்கள் அதிகார யுத்தம் செய்து நாட்டைப்பிடிப்பதையே அவர்களின் அடுத்த கட்ட குறிக்கோளாக வைத்திருக்கிறார்கள்..


இதற்காகத்தான் வெளிநாடுகளில் இருக்கும் தமிழ் மதவாத குழுக்கள் இலங்கையில் அண்மையில் கூட ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்கள். சிங்கள பௌத்த வாத கொள்கையில் இருக்கும் சிலரை தந்திரோபாயமாக கையாண்டு அன்றுதொட்டு இன்றுவரை பௌத்த கடும்போக்குவாதிகளான அநாகரீக தர்மபால தொடக்கம் ஆனந்த தேரர் இப்போது ஞானசார தேரர் வரை இவர்களுடைய பின்னனியில்தான் முஸ்லிம்களுக்கு எதிரான பிரச்சினைகளை காலத்திற்கு காலம் தூண்டி விட்டுக்கொண்டிருக்கிறார்கள்.


இவர்களுடைய ஊடுருவல் இந்தியாவினுடைய தலையீட்டுடன் எப்போது மாகாண அதிகாரங்கள் இந்தநாட்டில் பலவந்தமாக பரிந்துரைக்கப்பட்டதோ அப்போதிலிருந்தே சிங்கள தலைவர்கள் முஸ்லிம்களுடனான உறவின் தேவையை உணர்ந்தார்கள்.
பிற்காலத்தில் முஸ்லிம்களை தங்களுடைய ஆட்சியின் பங்காளியாகவும் ஏற்றுக்கொண்டார்கள்..


இப்போது தமிழர்களுடைய வெளிநாட்டுகளுடனான உறவு வலுபெற்றுவிட்டது. இப்போது இரண்டு தேசிய கட்சிகளை மோதவிட்டு ஜனநாயகத்திற்கு சாவுமணியடித்து நல்லாட்சியை கொண்டுவந்து இந்த நாட்டை பிளவுபடுத்தும் இறுதிபடிக்கட்டில் நின்றுகொண்டிருக்கிறார்கள். இதற்கு முஸ்லிம் தலைமைகளையும் விலைபேசி முடித்திருக்கிறார்கள் என்பது அரச தொலைக்காட்சி சேவையின் நிகழ்ச்சியில் நேற்றைய தினம் ஈ.பி.டி.பியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான டக்லஸ் தேவாநந்தா விடுதலை புலிகள்தான் தமிழ்தேசிய கூட்டமைப்பினர் என்ற வாசகத்தை நிறுவி பேசியிருந்தார். எனவே மேற்சொன்னமாதிரி அவர்களுடைய தேவை நிறைவேற்றப்படும் போது சிங்கள தமிழ் அதிகார யுத்தம் மீண்டும் தலைதூக்கி முஸ்லிம்களை சொந்த நாட்டிற்குள் அகதிகளாக்குவது அல்லது வெளியேற்றப்படுவது தவிர்க்க முடியாததொன்றாகிவிடும் எனவே இதனூடாக முஸ்லிம்களுக்கு மிகப்பெரிய பாடம் இருக்கிறது என்பதை சிந்திக்க தெரிந்தவர்கள் புரிந்துகொள்வார்கள்.


அஹமட் புர்க்கான் 
கல்முனை

jaffnamuslim
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.