ஸ்ரீலங்காவில் கடந்த ஆண்டோடு ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அதிகமான சிறு நீரக தானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, இந்த ஆண்டில் சிறுநீரக தானம் 75 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய சிறுநீரக மாற்று நிறுவனத்தின் இயக்குநர் வைத்தியர் ரத்னசிறி ஹேவகே தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து கருத்துத்தெரிவித்த அவர்,
”இந்த நடப்பாண்டில் 19 சிறுநீரகங்கள் மக்களிடமிருந்து தானமாக பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன. ஆனால், கடந்த 2016 ஆம் ஆண்டு 6 சீரநீரகங்கள் மட்டுமே தானமாக பெற்றுக்கொள்ளப்பட்டன. பெரும்பாலும் மூளைச்சாவு அடைபவர்களின் உடல்களிலிருந்தே அவர்களின் உறவினர்களது ஒப்புதலுடன் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.
ஸ்ரீலங்கா மக்கள் முன்னரைப்போலல்லாமல் இப்பொழுதெல்லாம் உடலுறுப்புத் தானத்திற்கு முன்வருகின்றமையானது சிறப்பானதொரு எடுத்துக்காட்டாகும். இது பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் வேரூன்றிவிட்டது என்றே சொல்லமுடியும். இதனால்தான் இந்த ஆண்டு மக்களிடம் அதிகமான சிறு நீரகங்களைப் பெறமுடிந்துள்ளது” என்று குறிப்பிட்டுள்ளதோடு குறித்த சிறு நீரக தானங்களைச் செய்யும் உறவினர்களுக்கு தமது பாராட்டுக்களினையும் அவர் தெரிவித்துள்ளார்.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.