நடுவானில் பறந்த விமானம்.. திடீரென்று தரையிறங்கியது.. பணிப்பெண் அப்படி என்ன செய்தார்!



மும்பையிலிருந்து டெல்லிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் புறப்பட்டு சென்ற சிறிது நேரத்திலேயே தரையிறக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

மும்பையிலிருந்து இன்று அதிகாலை 3 மணிக்கு ஜெட் ஏர்வேஸ் விமானம் ஒன்று மும்பையில் இருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றது.


விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திற்கு பிறகு, விமானப் பணிப்பெண் ஒருவர் கழிவறைக்கு சென்றார். அப்போது அங்கு ஒரு மர்ம கடிதம் ஒன்று சிக்கியது.

அதில் விமானம் கடத்தப்பட்டு, குண்டு வைத்து தகர்க்கப்படும் என எழுதியிருந்தது. இதனை பார்த்தவுடன் அதிர்ச்சியடைந்த ஊழியர் இது பற்றி விமான பைலட்டுக்கு தகவல் கொடுத்தார்.

உடனடியாக அகமதாபாத் விமான நிலையத்துக்கு தொடர்பு கொண்டு விமானத்தை தரையிறக்க அனுமதி கேட்டார். அதிகாரிகள் உடனடியாக தரையிறங்க அனுமதித்தனர்.

விமான நிலையம் முழுவதும் பெரும் பரபரப்பு காணப்பட்டது. பாதுகாப்பு படையினர் விமானம் தரையிறங்கியது சுற்றி சூழ்ந்துக்கொண்டு அனைவரையும் தீவிர சோதனை செய்தனர்.

ஆனால் விமானத்தில் தீவிரவாதிகள் யாரும் இல்லை. இந்த திடீர் கடிதம் பற்றி பாதுகாப்பு படையினர் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.