(சவூதி) ஜித்தா அரச அரண்மனை மீது துப்பாக்கிச்சூடு.. 2 பாதுகாவலர்கள் பலி.



சவுதி அரேபியாவில் உள்ள ஜித்தா அரச அரண்மனை வாயிலில் பாதுகாப்புப்பணியில் இருந்தவர்கள் மீது மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர்.


சவுதி அரேபியாவின் மேற்கு கடற்கரை நகரமான ஜித்தாவில் பாரம்பரியமான அரச அரண்மனை உள்ளது. இந்த அரண்மனையில் நேற்று காலை, ஒருவர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளார். அவரை அரண்மனை வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தவர்கள் தடுத்து நிறுத்த முயற்சித்துள்ளனர்.

இதையடுத்து, அந்த நபர் துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இந்த துப்பாக்கிச்சூட்டில் இரண்டு பாதுகாவலர்கள் உயிரிழந்தனர் எனவும் மூன்று பேர் காயமடைந்துள்ளனர் எனவும் அந்நாட்டு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

இந்த தாக்குதலில் ஈடுபட்டவரை போலீசார் சுட்டுக்கொன்றனர். அவர் சவுதி அரேபியாவைச் சேர்ந்த மன்சூர் அல்-அம்ரி என அடையாளம் காணப்பட்டுள்ளார். இந்த சம்பவத்தையடுத்து இந்த பகுதிக்கு செல்லும் அமெரிக்கர்கள் கவனத்துடன் இருக்குமாறு அந்நாட்டு தூதரகம் எச்சரித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.