அரசியலமைப்பில் மாற்றம் வந்தாலும் 2020 வரை ஜனாதிபதியின் நிறைவேற்றதிகாரம் தொடரும்- அதன்பின்னர்?



புதிய அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதி அதிகாரங்கள் குறைக்கப்பட்டாலும் 2020 வரை மைத்திரி நிறைவேற்று அதிகாரம் கொண்டவராக செயற்படுவாரென அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்புச் சபையின் உறுப்பினர் ஒருவர் சிங்கள வார இதழ் ஒன்றுக்கு வழங்கியுள்ள நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார்.


குறித்த நேர்காணலில் தொடர்ந்தும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, புதிய அரசியலமைப்பின் ஊடாக ஜனாதிபதியின் அதிகாரங்கள் குறைக்கப்படும்.

நாடாளுமன்றத்திற்கு கட்டுப்படும், பிரதமரின் ஆலோசனையின் பேரில் செயற்படும் ஜனாதிபதி பதவியே இனிவரும் காலங்களில் நடைமுறையில் இருக்கும்.

மாகாணசபைகளை கலைப்பது உள்ளிட்ட சில விடயங்களில் ஜனாதிபதிக்குள்ள அதிகாரம் தொடர்ந்திருக்கும். பிரதமரின் ஆலோசனையின் பேரில் அவற்றை முன்னெடுக்க நேரிடும்.

அதேநேரம் புதிய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்தாலும் தற்போதைக்கு அதிகாரத்தில் இருக்கும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரங்கள் கொஞ்சமும் குறைக்கப்பட மாட்டாது.

எதிர்வரும் 2020ஆம் ஆண்டு வரை சகல அதிகாரங்களும் கொண்ட நிறைவேற்றதிகார ஜனாதிபதியாக அவர் பதவி வகிப்பார் என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அஹமட் புர்க்கான்
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.