வடகொரியாவால் 2 மில்லியன் மக்களின் உயிருக்கு ஆபத்து : எச்சரிக்கும் நிபுணர்கள்..!


வடகொரியா அணு ஆயுத தாக்குதலில் ஈடுபட்டால் சியோல் மற்றும் டோக்கியோ நகரங்களில் உள்ள சுமார் 2 மில்லியன் மக்கள் கொல்லப்படலாம் எனவும், சுமார் 7 மில்லியன் மக்கள் படுகாயமடைய வாய்ப்புகள் உள்ளதாகவும் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தற்போதைய சூழலில் வடகொரிய அரசாங்கத்திடம் இருப்பதாக கூறப்படும் அணு ஆயுதங்களின் தாக்கத்தை கணணிகள் வாயிலாக ஆய்வுக்கு உட்படுத்தியதில், தென் கொரியா மற்றும் ஜப்பானின் மக்கள் தொகை மிகுந்த இரு நகரங்கள் கடுமையாக பாதிக்கப்படலாம் என நிபுணர்கள் கருதுகின்றனர்.

கொரிய தீபகற்பத்தில் நாளுக்கு நாள் அதிகரிக்கும் போர்ச் சூழல், எந்த நெருக்கடிக்கும் பணியாத கிம் ஜோங் வுன், கண்டம் விட்டு கண்டம் தாக்கும் ஏவுகணைகளின் சோதனை வெற்றி என உலக அரங்கையே தன்பக்கம் திரும்ப வைத்துள்ளது வடகொரியா.

இருப்பினும் வடகொரியா அரசாங்கத்திடம் எந்த அளவுக்கு அணு ஆயுதம் உள்ளன என்பது கணிக்க முடியாத அளவில் ரகசியம் காக்கப்படுவதால், கிம் ஜோங் வுன் எதிரி நாடுகளுக்கு எந்த அளவு தாக்கத்தை ஏற்படுத்துவார் என்பதை கணிக்க முடியவில்லை என நிபுணர்கள் ஒப்புக் கொண்டுள்ளனர்.

இதனிடையே அணு ஆயுத பயன்பாட்டால் எழும் தாக்கங்கள் குறித்து நிபுணத்துவம் பெற்ற ஆய்வாளர் மேற்கொண்ட ஆய்வில் அதிர்ச்சி தரும் தகவல் வெளியாகியுள்ளன.

வடகொரியாவுக்கு எதிராக அமெரிக்காவால் தொடுக்கப்படும் போரின் தாக்கம் மக்கள் தொகை மிகுந்த தென் கொரியா மற்றும் ஜப்பான் தலைநகரங்களை கடுமையாக பாதிக்கும்.

நினைத்துக் கூட பார்க்க முடியாத அப்படி ஒரு சூழல் உருவாகும் எனில் அதன் விளைவு என்பது சியோல் மற்றும் டோக்கியோ நகரங்களில் உள்ள 2.1 மில்லியன் மக்களின் சமாதிக்கு ஒப்பாகும், மட்டுமின்றி 7.7 மில்லியன் மக்கள் படுகாயமடைவார்கள் எனவும் அவர் கணித்துள்ளார்.

வடகொரியாவால் அணு ஆயுதம் தாங்கிய பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவ முடியும் என நிபுணர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ள நிலையில், வடகொரியாவின் முக்கியமான 20 முதல் 25 பகுதிகளில் இருந்து தாக்குதல் தொடுக்க அந்த நாடு தயார் நிலையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.