பாடசாலை சீருடையுடன் விடுதியில் 17 வயது மாணவிகள் இருவரும், 21 வயதுடைய இளைஞர்களுடன்“



பாடசாலை சீருடை அணிந்த நிலையில், மாணவிகள் இருவர் இரு இளைஞர்களுடன் விடுதியில் தங்கியிருந்த போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.


நீர்கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 17 வயது நிரம்பிய மாணவிகள் இருவரும், 21 வயதுடைய இளைஞர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.


கைது செய்யப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.


3 ஆயிரம் ரூபாவிற்கு அறைகளை வாடகைக்கு விடும் குறித்த நபர், வத்தளை பகுதியை சேர்ந்தவர் எனவும், சட்டவிரோதமாகவே விடுதியை நடத்தி வந்துள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

அத்துடன் பாடசாலை சீருடையுடன் விடுதியில் தங்குவதற்கு அனுமதித்தமை பாரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நீர்கொழும்பு காவல்துறை மற்றும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.



                  
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.