பாடசாலை சீருடை அணிந்த நிலையில், மாணவிகள் இருவர் இரு இளைஞர்களுடன் விடுதியில் தங்கியிருந்த போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியில் உள்ள பாடசாலையொன்றில் கல்வி கற்கும் 17 வயது நிரம்பிய மாணவிகள் இருவரும், 21 வயதுடைய இளைஞர்கள் இருவருமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட மாணவிகள் பெற்றோர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அவர்கள் தங்கியிருந்த விடுதியின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
3 ஆயிரம் ரூபாவிற்கு அறைகளை வாடகைக்கு விடும் குறித்த நபர், வத்தளை பகுதியை சேர்ந்தவர் எனவும், சட்டவிரோதமாகவே விடுதியை நடத்தி வந்துள்ளார் எனவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
அத்துடன் பாடசாலை சீருடையுடன் விடுதியில் தங்குவதற்கு அனுமதித்தமை பாரிய குற்றம் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, நீர்கொழும்பு காவல்துறை மற்றும் சிறுவர்கள் மற்றும் பெண்கள் பணியகம் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.