12 நாள் சிசுவை வீதியில் விட்டுச்சென்ற பல்கலை மாணவி நீதிமன்றத்தில் கூறிய காரணம்!



சிசுவை வீதியில் விட்டுச்சென்ற பல்கலைக்கழக மாணவி பிணையில் விடுதலை!


சிசுவை வீதியில் விட்டுச்சென்ற பல்கலைக்கழக மாணவி ஒருவரை அநுராதபுரம் நீதிமன்ற நீதவானும் மாவட்ட மேலதிக நீதவானுமான ஹர்ஷன கெக்குனுவெல  பிணையில் விடுதலை செய்துள்ளார்.

ஒரு இலட்சம் பெறுமதியான சரீர பிணையில் குறித்த மாணவி இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

குறித்த மாணவிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே அந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

அநுராதபுரம் போதனா வைத்தியசாலையில் குழந்தையை பிரசவித்துக்கொண்ட குறித்த மாணவி 12 நாட்கள் கடந்த நிலையில், குழந்தையை துணியினால் சுற்றி வைத்தியசாலைக்கு அருகில் விட்டுச் சென்றுள்ளார்.

விட்டு சென்ற குழந்தையை மீட்ட காவல்துறையினர் அநுராதபுரம் வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதுடன் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இந்நிலையில், குழந்தையை பிரசவித்த பேராதனை பல்கலைக்கழக மருத்துவ பீட மாணவியினை இனங்கண்டதோடு பொலன்னறுவையில் வைத்து கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட மாணவிக்கு எதிராக காவல்துறையினர் வழக்கினையும் தாக்கல் செய்துள்ளனர்.

தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்றைய தினம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே மாணவியினை சரீர பிணையில் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது.

அத்துடன், குறித்த மாணவி புளியங்குளம் பகுதியில் வாடகை வீடொன்றில் வசித்து வந்துள்ளதோடு கணவர் ஜப்பானில் பணிபுரிவதாகவும் வீட்டுரிமையாளரிடம் கூறியுள்ளார்.

மேலும் உறவினர்களுக்கு தெரிந்தால் தன்னை கொலை செய்துவிடுவார்கள் என்ற அச்சத்தினாலேயே தாம் குழந்தையை விட்டுச் சென்றதாகவும் நீதிமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.