இலங்கை, இந்திய T20 போட்டியில் நாணய சுழற்சியை மாற்றிய வர்ணனையாளர் முரளி கார்த்திக்…!
இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான ஒற்றை T20 போட்டி நேற்று கொழும்பு,ஆர்.பிரேமதாச மைதானத்தில் நிறைவுக்கு வந்தது.
நாள் முழுவதும் பெய்த கடுமையான மழையின் காரணமாக போட்டியின் நாணய சுழற்சி பெரிதும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்பட்டது.
இலங்கை அணியின் தலைவர் தரங்க நாணயத்தை சுழற்ற, கோஹ்லி நாணயத்தின் தலை (Head ) கோரினார்,ஆயினும் நாணய சுழற்சியில் இலங்கை அணித்தலைவர் தரங்க வெற்றிபெற்றதாக போட்டி மத்தியஸ்தர் சைகைகாண்பிக்க அதனை சரியாக கவனிக்காத முரளி கார்த்திக் போட்டியின் நாணய சுழற்சியை கோஹ்லி வெற்றிகொண்டதாக அறிவித்தார்.
போட்டி மத்தியஸ்தர் அதனை திருத்த முற்பட்டும் முரளி கார்த்திக் அதனையும் கவனிக்கத்தவறிவிட்டார்.
எதுஎவ்வாறாயினும் நேற்றைய போட்டியில் இந்திய வெற்றி பெற்றதற்கு பின்னர் இந்த சர்ச்சை அதிகம் உருவெடுத்துள்ளது.
வீடியோ இணைப்பு.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.