ஆக்ரோஷத்தை மீறிய மனிதாபிமானம்! : பாண்டியாவுக்கு ஓடிவந்து உதவிய ஸ்மித்!



அவுஸ்திரேலிய அணிக்கெதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 50 ஓட்டங்களால் அபார வெற்றியை பெற்றுக்கொண்டது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 6 விக்கட்டுகளை இழந்து நிலையில், புவனேஷ்வர் குமார் மற்றும் ஹர்த்திக் பாண்டியா ஆகியோர் களத்தில் நின்று துடுப்பெடுத்தாடினர்.


இதன்போது 47வது பந்து ஓவரின் 4வது பந்தினை அவுஸ்திரேலிய அணியின் கால்டர் நெயில் வீசினார். அந்த பந்தை எதிர்கொண்ட புவனேஷ்வர் குமார் இதனை வேகமாக அடித்து பவுண்டரிக்கு அனுப்ப முற்பட்டார்.

இந்நிலையில் குறித்த பந்தானது நேரடியாக சென்று மறுமுனையில் துடுப்பெடுத்தாடிக் கொண்டிருந்த பாண்டியாவின் காதை பலமாக தாக்க, பாண்டியா நிலைத்தடுமாறி மைதானத்தில் விழுந்தார்.

இதனை பார்த்து உடனடியாக செயற்பட்ட அவுஸ்திரேலிய அணியின் ஸ்டீவ் ஸ்மித், பாண்டியாவிடம் சென்று அவருக்கு உதவினார். அத்துடன் அவருக்கான சிகிச்சைகளை மேற்கொள்ள உடனடியாக மைதானத்துக்கு வெளியிலிருந்த இந்திய அணியின் வைத்தியரையும் அழைத்தார்.

தற்போது ஸ்மித்தின் செயலானது சமுக வலைத்தளங்களில் வைரலாகிவருகின்றது.

போட்டி என்ற அடிப்படையில் விராட் கோஹ்லி மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆகியோர் ஆக்ரோஷமாக விளையாடக்கூடியசர்கள். அதுமாத்திரமின்றி இந்திய அணியுடன் நடைபெறும் போட்டிகளில் ஸ்மித்தின் ஆக்ரோஷத்துக்கு எல்லையிருக்காது.

எனினும் போட்டியை மீறிய மனிதாபிமானமே ஸ்மித்தின் இந்த செயலுக்கு காரணம் என சமுக வலைத்தளங்களிலும் பேசப்பட்டு வருகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.