இலங்கை: பிரபல கண்டி “அலி பிரதர்ஸ்” வாகன கம்பனி உறவினறான மர்ஹும் அல்ஹாஜ் நயீம் ஹாஜியார் அவர்களின் புதல்வன் அல்ஹாஜ் முஹம்மத் அலி மற்றும் அவரின் பேரன் ஸாமித் அலி(KOBE MOTORS) (அல்ஹாஜ் குவைலித் அவர்களின் புதல்வன்) இருவரும் இன்று சனிக்கிழமை ஜப்பானில் நீரில் மூழ்கி வபாத்தானதாக தெரிவிக்கப்டுகிறது.
இவர்கள் கண்டி ஹத்தரலியத்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள்.
ஜப்பான் “ஷிமோடா” நகரிலுள்ள “யோஷிமி ஒஹாமா” எனும் கடற்கரை பகுதியிலேயே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
இலங்கையை சேர்ந்த ஆண்கள், பெண்கள் உட்பட சுமார் 14 பேர் கடலில் குளித்து கொண்டிருக்கும்போது வீசிய பலத்த காற்றினால் இவர்கள் கடலினுள் அடித்து செல்லப்பட்டனர்.
இதில் மேற்படி இருவரும் உயிரிழந்தனர், ஏனையோர் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவல்: MUFHIM (Sana) Anjo Jappan
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.