சவூதி மன்னர் – கட்டார் இளவரசர் தொலைபேசி உரையாடல்! நீடிக்கும் பிரச்சனைக்கு தீர்வா?


தீவிர வாத குழுக்களுடன் கட்டார் சம்பந்தப்பட்டிருப்பதாக குற்றம் சாட்டிய சவூதி தலைமையிலான ஆறு நாடுகள் கட்டாருடனான உறவுகளை முறித்து கொண்ட பின்னர் இராஜதந்திர அளவில் பாரிய இடைவெளி ஒன்று ஏற்பட்டது.

வளைகுடா நாடுகளுக்கிடையே நடந்துள்ள இந்த மோதல் சில மாதமாக பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.

கட்டாரின் மீது தடைகளை ஏற்படுத்திய வளைகுடா நாடுகள் தற்போது சில நல்லெண்ண சமிக்கைகளை வெளியிட தொடங்கியுள்ளன.

இதன் ஒரு படியாக, சவூதி மன்னர் சல்மான் கத்தார் இளவரசர் ஷேக் தமீம் இடையே தொலைபேசி பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றுள்ளது. இது இரு நாடுகளுக்கும் இடையிலான முறுகல் நிலையை தீர்த்து வைக்கும் என கூறப்படுகிறது.


இரு தலைவர்களின் பேச்சுவார்த்தையில் இடம்பெற்ற தகவல்கள் வெளியாகவில்லை. இருப்பினும், மற்ற நாடுகளுடன் உறவை புதுப்பிப்பது குறித்து பேசியிருக்கலாம் என இராஜதந்திர ஆர்வலர்கள் எதிர்வு கூறியுள்ளார்கள்.

கட்டருடனான இந்த பிரச்னைக்கு மத்தியஸ்தம் வகிக்க தான் தயாராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்திருந்தார். இதன் பின்னரே இந்த சுமுகமான தொலைபேசி உரையாடல் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.


worldtamil
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.