சங்கா, மஹேலவுக்கு மாற்று வீரர்கள் இலங்கையில் இல்லை – ரசல் ஆர்னோல்ட்



இலங்கை கிரிக்கெட் அணி மோசமான பின்னடைவுகளை சந்தித்து வரும் நிலையில், இப்போதைய இளம் வீரர்களால் இலங்கை அணிக்கு வெற்றிகளை பெற்றுக்கொடுக்க முடியாதுள்ளமை பலரது விமர்சனத்துக்கும் உள்ளாகியுள்ளது.

மூத்த வீரர்களான சங்ககாரா, மஹேல ஜெயவர்த்தன ஆகிய வீரர்கள் ஓய்வு பெற்றமையே இலங்கையின் இந்த மோசமான பின்னடைவுக்களுக்கு காரணம் என்பது பலரதும் கருத்தாகும்.

இதுதொடர்பில் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ரசல் ஆர்னோல்ட் தனது கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

இப்போதைய இலங்கை அணியில் சங்ககாரா, மஹேல ஜெயவர்த்தன ஆகியோருக்கு இணையான மாற்று வீரர்கள் யாரும் இல்லை.

அதேபோன்று டில்ஷானுக்கும் மாற்று வீரர் இதுவரை அடையாளம் காணப்படவில்லை.

வீரர்களுக்கு ஏற்படும் அதிகப்படியான உபாதைகளும் இலங்கையின் தோல்விகளுக்கு பிரதானமான காரணமாகும்.

எது எவ்வாறாயினும் உலக கிண்ணத்துக்கு இடையில் ஓராண்டு முழுமையாக உள்ள நிலையில் இலங்கை அணியால் சிறப்பாக எழுந்துவர முடியும் எனும் நம்பிக்கையையும் ஆர்னோல்ட் வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.