இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரில் 4 - 0 என்று முன்னிலை வகித்து வந்த இந்திய அணி, கொழும்புவில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்றுஇலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது. இதனால், அந்நாட்டு ரசிகர்களும் அணியினரை இணையதளங்களில் வறுத்தெடுத்து வருகின்றனர்.
இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்
இலங்கை அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடர்... என்ன சொல்கிறார் கேப்டன் கோலி?
இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள், டெஸ்ட் மற்றும் டி-20 தொடர்களில் விளையாடியது. ஒருநாள் தொடரில் 4 - 0 என்று முன்னிலை வகித்து வந்த இந்திய அணி, இன்று கொழும்புவில் நடைபெற்ற ஐந்தாவது ஒருநாள் போட்டியிலும் வெற்றி பெற்று இலங்கை அணியை ஒயிட் வாஷ் செய்தது. மேலும், இந்தப் போட்டியில் கோலி, தனது 30-வது சதத்தை அடித்தார்.
இந்நிலையில், இலங்கை அணியின் கேப்டன் உபுல் தரங்கா, 'ஒரு கேப்டனாக இந்தத் தொடரை இப்படி இழந்தது மிகவும் வருத்தத்தை அளிக்கிறது. கடைசி இரண்டு ஆண்டுகளாகவே நாங்கள் சரியாக விளையாடவில்லை. ஆனால், இப்போது நாங்கள் இருக்கும் இடத்தில் இருந்து மீண்டெழுந்து வருவதற்கு ஒரு நல்ல வாய்ப்பு அமைந்திருக்கிறது. இன்னும் ஒரேயொரு மாதத்தில் அடுத்த ஒருநாள் தொடர் நடக்கவுள்ளது. அதில் சிறப்பாக விளையாடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது. நாங்கள் தோல்வியடையும் போது எங்கள் ரசிகர்கள் எங்களிடமிருந்து விலகிச் செல்கிறார்கள். ஆனால், தவறுகள் நடக்கத்தான் செய்யும். எனவே எங்கள் ரசிகர்களின் ஆதரவு இப்போதுதான் தேவைப்படுகிறது. அதுவே எங்கள் பலம்!' என்று தெரிவித்துள்ளார்.
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.