அல்-மினா வித்தியாலய ஆசிரியர் சாஜித்தைப் பாராட்டி கௌரவிப்பு நிகழ்வு.




( ஏ.ஆர்.அபி அஹமட் றபீக் )
நிந்தவூரின் வரலாற்றில் சுமார் 31 வருடங்களின் பின்னர் இலங்கை கல்வி நிருவாக சேவைகள் போட்டிப் பரீட்சையில் சித்தியெய்தி, பதவியுயர்வு பெற்றுச் செல்லும் நிந்தவூர் கமுஃஅல்- மினா வித்தியாலய உடற்கல்வி ஆசிரியர் அல்ஹாஜ்.யூ.எல்.எம்.சாஜித்தைப் பாராட்டி, கௌரவிக்கும் நிகழ்வு இன்று(20) நிந்தவூர் அல்- மினா வித்தியாலயத்தில் சிறப்பாய் இடம் பெற்றது.


வித்தியாலய அதிபர் எம்.எல்.எம்.நிஹார்தீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அதிதியாகக் கலந்து கொண்டு உரையாற்றிய அல்ஹாஜ்.யூ.எல்.எம்.சாஜித் கருத்து வெளியிடுகையில்:- 'நான் ஒரு உடற்கல்வி ஆசிரியனாக இருந்திட்ட போதிலும், 5ம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை மாணவர்களைக் கற்பித்து, அதிகமாணவர்களை சித்தியடையச் செய்த ஆசிரியனாகக் காணப்பட்டேன். கற்பிப்பதில் எனக்கு எப்போதுமே அதிக பிரியம்! நான் தொடர்ந்தும் மாணவர்களுக்குக் கற்பித்ததன் காரணத்தால்தான் இப்போட்டிப் பரீட்சையில் சித்தியடைய முடிந்தது. நான் கற்பித்த காலத்தில் பல இன்னல்களுக்கும், சவால்களுக்கும், குழிபறிப்புகளுக்கும் மத்தியில் தான் அல்லாஹ்வின் உதவியினாலும், எனது தாய், தகப்பனின் பிரார்த்தனைகளினாலும் சித்தியடைந்துள்ளேன். மாணவர்களாகிய நீங்களும் சிறப்பாகக் கற்கவேண்டும். எதிர்காலத்தில் கல்வித்துறையில் மேலும் பல படிகளைத் தாண்ட வேண்டும் எனப் பிரார்த்திக்கிறேன். இன்ஷாஅல்லாஹ் நான் உயர்பதவி வகிக்கின்ற காலத்தில் என்னுடைய நண்பர்கள், எதிரிகள், உறவினர்கள், குழிதோண்டியோர் எவர் எனது உதவியை நாடினாலும் அதனை மனங்கோணாது செய்து கொடுக்கச் சித்தமாக இருக்கிறேன்' எனத் தெரிவித்தார்.


வீரன் சாஜித்தும், அவர் பாரியாரும் அதிபர், ஆசிரியர்களால் மாலை அணிவித்து வரவேற்கப்பட்டனர், மாணவ மாணவிகள் மலர்தூவி வரவேற்று, பகல் விருந்தும் வழங்கி மகிழ்ந்தனர்.

இறுதியில் சாதனை நாயகன் சாஜித் அதிபர் ஆசிரியர்களால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டார்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.