
மியன்மாரில் ரோஹின்யா முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளையும், படுகொலைகளையும் நிறுத்துவதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கம் தலையிட வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது.
இந்த விடயத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் உடனடியாக தலையிட்டு நடவடிக்கை எடுக்காவிடின் வேறு வழிகளில் போராட்டங்களை மேற்கொள்ளவுள்ளதாகவும் இன்று கொழும்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மியன்மாரில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வருகின்ற வன்முறைகளையும், படுகொலைகளையும் இன்நிறுத்துமாறு வலியுறுத்தி கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
முஸ்லிம் அமைப்புகள் பல இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை உறுப்பினர்கள் பொது மக்கள் என பலர் பங்கேற்றனர்.
மியன்மார் தூதரகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றதோடு, முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்நத்து விடப்பட்டுள்ள வன்முறைகளை உடனடியாக நிறுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டது.
எஸ்.எம்.மரிக்கார் “மியன்மாரில் முன்னெடுக்கப்படும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளுக்கு எதிராக எமது நாட்டின் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் ஐக்கிய நாடுகள் கூட்டத்தொடரின்போது வெளிப்படுத்த வேண்டும்.
இந்த போராட்டத்தின் ஊடாக மியன்மாரில் நடைபெறும் இனப்படுகொலைக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு ஆங் சாங் சூகிக்கு மாத்திரமல்ல இந்த நாட்டின் தலைவர்களுக்கும் வலியுறுத்த விரும்புகின்றோம்.
கடந்த அரசாங்கத்தின் காலத்தில் இவ்வாறான ஒரு நிலைமையே நடைபெற இருந்தது. அதனை நாம் மாற்றியமைத்தோம். ஆகவே நாட்டில் மாத்திரமல்ல உலகில் எங்கு இவ்வாறான விடயங்கள் நடைபெற்றாலும் அதற்கு எதிராக நாம் முன்நிற்க வேண்டும்.
மனித உயிர்களை படுகொலை செய்வதற்கு நாம் எப்போதும் எதிராக செயற்பட வேண்டும். இன்று நாம் தரும் தகவலை ஏற்றுக்கொள்ளுமாறு நாம் உங்களிடம் கேட்கின்றோம். இதனை ஏற்றுக்கொள்ளாவிடின் இதனைவிட தீவிரமானக செய்தி ஒன்றை தரவேண்டி ஏற்படும்.“
இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் அசாத் சாலி, ஆங் சாங் சு கிக்கு வழங்கப்பட்டுள்ள சமாதானத்திற்கான நோபல் பரிசினை மீளப்பெற வேண்டுமென வலியுறுத்தினார்.
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.