ஏன் இவர் தேசிய அணியான, இலங்கை அணியிலிருந்து ஓய்வு பெற்றார் என்கின்ற கேள்வி கிரிக்கட் விமர்சகர்கள் மற்றும் இரசிகர்கள் மத்தியில் இற்றைவரை நிலவுகின்றது, காரணம் சர்வதேச கிரிக்கட்டில் ஆடும் போது, ஓய்வு பெற்ற பின்னரும் சர்வதேசமெங்கும் பேசப்பட்டுவரும் வீரர் குமார் சங்கக்கார என்றால் மிகையில்லை.
இங்கிலாந்து மண்ணில் கவுண்டிப்போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. சங்கா, சரே அணியை பிரதிநிதித்துவப்படுத்தி ஆடிவருகின்றார். தற்சமயம் சமர்செட் அணிக்கான போட்டியில் முதல் இனிங்ஸில் ஆடிவரும் சங்கா, ஆட்டமிழக்காமல் 119 ஓட்டங்களைப்பெற்றுள்ளார். இப்பருவகாலத்தில் 9 முதற்தரப்போட்டிகளில் 13 இனிங்ஸில் பங்குபெற்றியுள்ள சங்கா 8 சதங்கள் மற்றும் இரண்டு அரைச்சதங்களை விளாசியுள்ளார். ஆட்டமிளக்காது பெற்ற சதமானது 64வது முதற்தர சதமாகும்.
1369ஓட்டங்களை குவித்துள்ள சங்கா, 124.45 என்ற ஓட்ட சராசரியைக்கொண்டுள்ளார், லாராவிற்கு அடுத்த வீரராக இங்கிலாந்து மண்ணில் இங்கிலாந்து பந்து வீச்சாளர்களை துவம்சம் செய்து வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.