கந்தளாய் நகர் பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறப்படும் நபருக்கு 82500/= ரூபாய் தண்டம் செலுத்துமாறு நேற்று (21) கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித தம்மிக்க உத்தரவிட்டுள்ளார்.
கந்தளாய் நகரத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரை கைது செய்து மோட்டார் சைக்கிள் தொடர்பில் ஆவணங்களை கோரிய போது எவ்வித ஆவணமும் இல்லாத நிலையில் கந்தளாய் தலைமையக போக்குவரத்து பொலிஸார் கந்தளாய் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.
அவ்வழக்கு விசாரணையின் போது மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியதாகவும்,
பொலிஸாரின் சமிக்கையை கவனிக்காமல் சென்றமை.
வாகன வருமான உத்தரவு பத்திரம் இல்லாமல் செலுத்தியமை.
காப்புறுதி இல்லாமல் செலுத்தியமை.
தலைக்கவசம் இல்லாமல் சென்றமை.
இரு பக்க கண்ணாடிகளும் இல்லாமல் இருந்தமை.
மோட்டார் சைக்கிளில் காணப்பட்ட சைலன்சரை மாற்றி வேறு சைலன்சர் செய்தமை.
வாகனத்திற்குறிய இலக்கம் பொருத்தாமல் இருந்தமை என எட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.
கந்தளா-யுனிட் 15 -வெண்றாசன்புர பகுதியைச்சேர்ந்த ஏ.ஜி.சுஜித் மதுசங்க (22வயது) என்பவருக்கே இத்தண்டம் செலுத்துமாறு நீதவான் கட்டளையிட்டார்.
(அப்துல்சலாம் யாசீம்)

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.