கந்தளாயில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபருக்கு 82,500/= ரூபாய் தண்டம்; எதற்கு தெரியுமா?



கந்தளாய் நகர் பகுதியில் மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியதாக கூறப்படும் நபருக்கு 82500/= ரூபாய் தண்டம் செலுத்துமாறு நேற்று (21) கந்தளாய் நீதிமன்ற நீதவான் துசித தம்மிக்க உத்தரவிட்டுள்ளார்.

கந்தளாய் நகரத்தில் மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்திய நபரை கைது செய்து மோட்டார் சைக்கிள் தொடர்பில் ஆவணங்களை கோரிய போது எவ்வித ஆவணமும் இல்லாத நிலையில் கந்தளாய் தலைமையக போக்குவரத்து பொலிஸார் கந்தளாய் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர்.

அவ்வழக்கு விசாரணையின் போது மது போதையில் மோட்டார் சைக்கிள் செலுத்தியதாகவும்,

பொலிஸாரின் சமிக்கையை கவனிக்காமல் சென்றமை.

வாகன வருமான உத்தரவு பத்திரம் இல்லாமல் செலுத்தியமை.

காப்புறுதி இல்லாமல் செலுத்தியமை.

தலைக்கவசம் இல்லாமல் சென்றமை.

இரு பக்க கண்ணாடிகளும் இல்லாமல் இருந்தமை.

மோட்டார் சைக்கிளில் காணப்பட்ட சைலன்சரை மாற்றி வேறு சைலன்சர் செய்தமை.

வாகனத்திற்குறிய இலக்கம் பொருத்தாமல் இருந்தமை என எட்டு குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்ததாகவும் தெரியவருகின்றது.

கந்தளா-யுனிட் 15 -வெண்றாசன்புர பகுதியைச்சேர்ந்த ஏ.ஜி.சுஜித் மதுசங்க (22வயது) என்பவருக்கே இத்தண்டம் செலுத்துமாறு நீதவான் கட்டளையிட்டார்.

(அப்துல்சலாம் யாசீம்)

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.