மியான்மரை விட்டு வெளியேறிய 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள்


மியான்மரில் தீவிரவாதிகளுக்கு எதிரான பிரசாரத்தை அந்நாட்டு ராணுவத்தினர் தொடங்கிய இரண்டு வாரத்திற்கும் குறைவான காலத்திற்குள், 73,000 ரொஹிஞ்சா முஸ்லிம்கள் மியான்மரில் இருந்து வங்கதேசம் சென்றுள்ளதாக ஐ.நாவின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.

இன்னும் பலர் வந்துகொண்டிருப்பதாக ஐ.நா செய்தி தொடர்பாளர் விவின் டான் பிபிசியிடம் கூறினார்.

இன்று, மேற்கு மியான்மரில் புகை மேலேழும்பி வருவதைப் பார்க்க முடிந்தது. பற்றி எரியும் கிராமங்களில் இருந்து அப்புகை வந்திருக்கலாம்.

ராணுவப் படையினர் தங்களைச் சுட்டதுடன், வீடுகளுக்கும் தீ வைத்ததாக அகதிகள் கூறுகின்றனர். ஆனால், இந்த குற்றச்சாட்டை அரசு மறுக்கிறது.

வன்முறைக்குக் காரணமானவர்கள் என அதிகாரிகளால் குற்றம்சாட்டப்படும் ரொஹிஞ்சா முஸ்லிம்களைப் பாதுகாப்பு படையினர் தேடி வருவதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

வங்கதேச எல்லையோரம் உள்ள கிராமங்கள் அகதிகளால் நிரம்பி வழிகின்றன. அங்கு கடுமையான உணவுப்பற்றாக்குறை உள்ளதாக உதவிப் பணியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.