தம்புள்ளையில் நேற்று முன்தினம் (3) இடம் பெற்ற பஸ் வேன் கோர விபத்தில் பலியான தாயின் ஜனாசா நல்லடக்கம் நேற்று (4) அதி காலை 3 மணியளவில் பலாங்கொடை முஸ்லிம் மைய வாடியில் இடம் பெற்றது.
இவ்விபத்தில் மரணமடைந்த தாய் பாத்திமா ஜெஸ்மின் பாஹிம் (வயது 38) 4 பிள்ளை களின் தாயாவார்.
இத்தம்பதிகளின் மூத்த புதல்வி எம்.எப்.எப். இல்மா (வயது 14),
மகன் எம்.எப். எப்.இன்சாப் (வயது 10) ஆகிய இரண்டு மாணவர்களும் முறையே பலாங்கொடை இ/ ஜெயிலானி
மத்திய கல்லூரி மற்றும் பலாங் கொடை இ/அல் மினாராமுஸ்லிம் வித்தியாலயம் ஆகிய வற்றில் முறையே தரம் 10 மற்றும் 5 ஆகி யவற்றில் கல்வி கற்றுக் கொண்டி ருக்கும் மாணவர்களாவர்.
இவர்கள் இருவரும் முறையே மாத்தளை மற்றும் கண்டி அரச மருத்துவமனைகளில் அவசர சத்திரசிகிச்சை பிரிவுகளில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
இம்மாணவர்கள் உட் பட இவ்விபத்தில் பாதிக்கப்பட்டு தற்போது பல வைத்தியசாலைகளிலும் சிகிச்சை பெற்று வரும் சகலரின் தேக சுகத்திற்காக இப்பகுதி மக்களின் விசேட பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
madawalanews

Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.