ஐரோப்பிய கால்பந்து கூட்டமைப்பு, வருடத்தின் சிறந்த வீரரை ஒவ்வொரு ஆண்டும் தேர்ந்தெடுத்து விருது வழங்கி சிறப்பிக்கும். இந்த வருடத்தின் தலைசிறந்த வீரர் விருதை ரொனால்டோ பெற்றார்.
கால்பந்து உலகின் தலைசிறந்த வீரர்கள் பட்டியலில் போர்ச்சுகல் கேப்டனும், ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான ரொனால்டோ -க்கு முக்கிய இடம் உண்டு. இந்த வருடம் தனது சிறப்பான ஆட்டத்தினால் ரியல் மாட்ரிட் அணியை தொடர்ந்து இரண்டாவது முறையாக சாம்பியன்ஸ் லீக் கோப்பையை கைப்பற்ற வைத்தார். இந்த தொடரில் மட்டும், அவர் 12 கோல் அடித்து ரசிகர்களை மகிழ்வித்தார்.
இந்த வருடத்திற்கான சிறந்த வீரர் விருது பட்டியலில் அர்ஜென்டினா மற்றும் பார்சிலோனா அணியின் நட்சத்திர ஆட்டக்காரருமான மெஸ்சியும் இருந்தார். இருந்தாலும் ரொனால்டோ, மெஸ்சியை வீழ்த்தி மூன்றாவது முறையாக விருதினை வென்றார். மெஸ்சி இந்த விருதினை இரண்டு முறை வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
விகடன்-
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.