லசித் மலிங்கவின் ஆலோசனையில், இலங்கையின் 5 விக்கெட்டுக்களை அள்ளிய தபும்ரா




லசித் மலிங்கா ஐபிஎல் போட்டியின் போது கொடுத்த பந்துவீச்சு ஆலோசனைகள் தனக்கு உதவியாக இருந்தது என இந்திய வீரர் பும்ரா கூறியுள்ளார்.


இலங்கை - இந்தியா இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.


இந்திய வேகப்பந்து வீச்சாளர் பும்ரா 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.


இது குறித்து பும்ரா கூறுகையில், இலங்கையில் இதற்கு முன் நான் விளையாடாத நிலையில், சூழல் குறித்து தெரியாமல் முதல் முறையாக பந்து வீசினேன்.


இது தொடர்பாக சீனியர்களிடம் நான் கேட்ட ஆலோசனைகள் உதவியாக இருந்தது. ஐபிஎல் போட்டிகளில் மும்பை அணி வீரர் லசித் மலிங்கா எனக்கு நிறைய ஆலோசனைகள் கூறுவார்.


கடந்த சில ஆண்டுகளாக அவரிடம் நான் கற்றுக்கொண்ட விடயங்கள் எனக்கு பெரிதும் உதவியது.


பந்துவீச்சாளர்கள் ஏதாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்க வேண்டும் என்பதே எனது நோக்கமாகும்.


இவ்வாறு பும்ரா கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் அறிய (Like Page) பக்கத்தை LIKED செய்யுங்கள்.
மேலும் எமது பக்கத்தினை (Share) பண்ணவும்

முக்கிய குறிப்பு :

எமது இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு எமது நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். =============================================================== உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம் இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.