இலங்கை மற்றும் இந்திய அணிகள் மோதும் தீர்மானமிக்க மூன்றாவது சர்வதேச ஒருநாள் போட்டியில் இந்திய அணிக்கு வெற்றியிலக்காக 218 ஓட்டங்களை இலங்கை அணி நிர்ணயித்துள்ளது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாட முடிவெடுத்தது.அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி முதல் இரு விக்கெட்டுக்களை 28 ஓட்டங்களுக்கு பறிகொடுத்து தடுமாறியது.
ஆரம்ப வீரராக களமிறங்கிய டிக்வெல்ல 13 ஓட்டங்களுடனும், அதன்பின்னர் களமிறங்கிய குசால் மென்டீஸ் ஒரு ஓட்டத்துடன் களத்தினை விட்டு வெளியேறி இலங்கை ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தனர்.
மூன்றாவது விக்கெட்டுக்காக இணைந்த சந்திமால் மற்றும் லஹிரு திரிமான ஜோடி நிதமனாக துடுப்பெடுத்தாடி இலங்கை அணியின் ஓட்ட எண்ணிக்கையினை உயர்த்தினர்.இந்திய அணி வீரரான பாண்டியா வீசிய 26 ஆவது ஓவரில் 36 ஓட்டங்கள் பெற்றிருந்த சந்திமால் பும்ராவிடம் பிடிகொடுத்து ஆடுக்களத்தினை விட்டு வெளியேறினார்.
அதன்பின்னர் களமிறங்கிய வீரர்கள் பெரிதாக தனது ஆட்டத்தினை வெளிப்படுத்தாமையால் இலங்கை அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை பறிகொடுத்து 217 ஓட்டங்களை பெற்றனர். இலங்கை அணி சார்பாக நிதானமாக துடுப்பெடுத்தாடிய லஹிரு திரிமான 80 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இந்திய அணி சார்பாக பந்துவீச்சில் பும்ரா 5 விக்கெட்டுக்களை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
Post a Comment
கருத்துரையிடுக
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :
1. கட்டுரைகள் குறித்து கருத்துக்களைப் பதிவு செய்யும் போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்.
2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் ஆக்கங்களை மட்டுமே விமர்சியுங்கள்.
3. உங்களது மேலான கருத்துக்களையும், ஆலோசனைகளையும் ஆவலுடன் எதிர்பார்கிறோம்
நிமிர்வு இதழின் வளர்ச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும். உங்கள் வருகைக்கு நன்றி.